இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3.47 லட்சமாக அதிகரிப்பு;703 பேர் சாவு
1 min read
Daily corona infection in India increases to 3.47 lakh; 703 deaths
21.1.2022
இந்தியாவில் நேற்று 3.17 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று தொற்று பாதிப்பு 3.47 லட்சமாக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 703 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக நாட்டில் கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன்விவரம் வருமாறு:-‘
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 47 ஆயிரத்து 254 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது நேற்று பாதிப்பான 3 லட்சத்து 17 ஆயிரத்து 532 மற்றும் புதன் கிழமை பாதிப்பான 2 லட்சத்து 82 ஆயிரத்து 970-ஐ விட அதிகமாகும்.
இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 85 லட்சத்து 66 ஆயிரத்து 27 ஆக அதிகரித்துள்ளது.
இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 2 லட்சத்து 51 ஆயிரத்து 777 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 60 லட்சத்து 58 ஆயிரத்து 806 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 20 லட்சத்து 18 ஆயிரத்து 825 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
703 பேர் சாவு
ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 703 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 88 ஆயிரத்து 396 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 160 கோடியே 43 லட்சத்து 70 ஆயிரத்து 484 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.