தமிழகத்தில் இன்று 30,580 பேருக்கு கொரோனா; 40 பேர் சாவு
1 min read
Corona for 30,580 people in Tamil Nadu today; 40 dead
23.1.2022
தமிழகத்தில் இன்று 30,580 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டு உள்ளது. 40 பேர் உயிரிழந்துள்ளனர். 24,283 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று 30,744 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்று பாதிப்பு 30,580 ஆக சற்று குறைந்துள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் 1,57,732 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் மட்டும் 30,567 பேர், மற்றும் ஆந்திர மாநிலம், கர்நாடகாவில் தலா 4 பேரும், குஜராத் 2, புதுச்சேரி , ஜார்கண்ட் மற்றும் கேரள மாநிலங்களுக்கு சென்று திரும்பிய தலா ஒருவர் என மொத்தம் 30,580 பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,33,990 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 17,324 பேர் ஆண்கள், 13,256 பேர் பெண்கள்.
தமிழகத்தில் இன்று 24,283 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 28,95,818 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 40 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,218 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 6,452 ஆக இருந்த நிலையில் இன்று (ஜனவரி 23 ம் தேதி) 6,383 ஆக சற்று குறைந்துள்ளது.
கோவையில் 3912 பேருக்கும், செங்கல்பட்டில் 1841 பேருக்கும், ஈரோட்டில் 1220 பேருக்கும், கன்னியாகுமரியில் 1248 பேருக்கும், கிருஷ்ணகிரியில் 1010 பேருக்கும், சேலத்தில் 1074 பேருக்கும், தஞ்சையில் 1123 பேருக்கும், திருப்பூரில் 1507 பேருக்கும், நெல்லையில் 608 பேருக்கும், தென்காசியில் 341 பேருக்கும், தூத்துக்குடியில் 428 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.