June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் புதிதாக 3,33,533 பேருக்கு கொரோனா; 525 பேர் சாவு

1 min read

Corona for 3,33,533 newcomers in India; 525 deaths

23/1/2022
இந்தியாவில் தினசரி கொரோனா தொடர்ந்து 2-வது நாளாக குறைந்தது. இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,33,533 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 525 பேர் இறந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் ஒமைக்ரானால் தூண்டப்பட்ட கொரோனா 3-வது அலையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஏறிக்கொண்டே சென்றது. நேற்று இந்த நிலையில் சிறியதொரு மாற்றம் ஏற்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை 3 லட்சத்து 47 ஆயிரத்து 254 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் நேற்று இந்த எண்ணிக்கை 3 லட்சத்து 37 ஆயிரத்து 704 ஆக சரிவை சந்தித்தது.

இந்த நிலையில் மேலும் குறைந்த அளவாக இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 லட்சத்து 33 ஆயிரத்து 533 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. (இது முந்தைய நாள் பாதிப்பை விட 4,171 குறைவாகும்). இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,92,37,264 ஆக அதிகரித்துள்ளது.

525 பேர் சாவு

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 525 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,89,409 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 2,59,168 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,65,60,650 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு 21,87,205 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 1,61,92,84,270 பேருக்கு (இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 71,10,445 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 18,75,533 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 71,53,75,425 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.