தமிழகத்தில் இன்று 30,215 பேருக்கு கொரோனா; 46 பேர் சாவு
1 min read
Corona for 30,215 people in Tamil Nadu today; 46 deaths
24.1.2022
தமிழகத்தில் இன்று 30,215 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டு உள்ளது. 46 பேர் உயிரிழந்துள்ளனர். 24,639 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று 30,580 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்று பாதிப்பு 30,215 ஆக சற்று குறைந்துள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
தமிழகத்தில் 1,51,217 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் மட்டும் 30,208 பேர், மற்றும் ஆந்திர மாநிலம் 8, கர்நாடகா, திரிபுரா மாநிலங்களுக்கு சென்று திரும்பிய தலா ஒருவர் என மொத்தம் 30,215 பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,64,205 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 17,471 பேர் ஆண்கள், 12,744 பேர் பெண்கள். தமிழகத்தில் 24,639 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 29,20,457 ஆக உயர்ந்துள்ளது.
46 பேர் சாவு
தமிழகத்தில் இன்று 46 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,264 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 6,383 ஆக இருந்த நிலையில் இன்று (ஜனவரி 24 ம் தேதி) 6,296 ஆக சற்று குறைந்துள்ளது.
கோவையில் 3786 பேருக்கும், செங்கல்பட்டில் 1742 பேருக்கும், ஈரோட்டில் 1199 பேருக்கும், கன்னியாகுமரியில் 1236 பேருக்கும், சேலத்தில் 1089 பேருக்கும், தஞ்சையில் 1117 பேருக்கும், திருப்பூரில் 1504 பேருக்கும், நெல்லையில் 526 பேருக்கும், தென்காசியில் 453 பேருக்கும், தூத்துக்குடியில் 407 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்துள்ளது.