தமிழகத்தில் இன்று 9,916 பேருக்கு கொரோனா; 30 பேர் சாவு
1 min read
Corona for 9,916 people in Tamil Nadu today; 30 dead
3.2.2022
தமிழகத்தில் இன்று 9,916 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டு உள்ளது. 30 பேர் உயிரிழந்துள்ளனர். 21,435 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று 11,993 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்று பாதிப்பு 9,916 ஆக குறைந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழகத்தில் 1,27,356 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் 9,900 பேருக்கும் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் 4, இலங்கை 1, நாடுகளுக்கு சென்று திரும்பியவர்கள் மற்றும் மேற்குவங்கம் 6, ஆந்திரா4, மற்றும் உ.பி., 1 ஆகிய மாநிலங்களுக்கும் சென்று திரும்பியவர்களையும் சேர்த்து 9,916 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,97,238 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 5,890 பேர் ஆண்கள், 4,026 பேர் பெண்கள். இதன் மூலம் 21,435 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 32,04,213 ஆக உயர்ந்துள்ளது.
30 பேர் சாவு
தமிழகத்தில் இன்று 30 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,696 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
கோவையில் 1224 பேருக்கும், செங்கல்பட்டில் 983 பேருக்கும், நெல்லையில் 142 பேருக்கும், தென்காசியில் 37 பேருக்கும், தூத்துக்குடியில் 86 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++