தமிழ்நாட்டில் இன்று 3.592 பேருக்கு கொரோனா
1 min read
Corona for 3.592 people in Tamil Nadu today
10/2/2022
தமிழ்நாட்டில் நேற்றைய பாதிப்புடன் ஒப்பிடும்போது இன்று தினசரி கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று 3.592 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா
தமிழ்நாட்டில் இன்று 3 ஆயிரத்து 592 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 3 ஆயிரத்து 971 மற்றும் நேற்று முன் தின பாதிப்பான 4 ஆயிரத்து 519-ஐ விட குறைவாகும்.
இதனால், தமிழ்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 28 ஆயிரத்து 68 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 14 ஆயிரத்து 182 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 33 லட்சத்து 23 ஆயிரத்து 214 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 66 ஆயிரத்து 992 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தாக்குதலுக்கு இன்று 25 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 862 ஆக அதிகரித்துள்ளது.