28 வங்கிகளிடம் ரூ.22,842 கோடி கடன் மோசடி: ஏ.பி.ஜி.எஸ்., நிறுவனரிடம் விசாரணை
1 min read
Rs 22,842 crore loan scam to 28 banks: APGS, founder probed
17.2.2022
28 வங்கிகளிடம் ரூ.22,842 கோடி கடன் மோசடி செய்ததாக புகார்கூறப்பட்ட ஏ.பி.ஜி.எஸ்., நிறுவனரிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
கப்பல் கட்டும் நிறுவனம்
குஜராத்தை சேர்ந்த ஏ.பி.ஜி., ஷிப்யார்டு நிறுவனம், கப்பல் கட்டும் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனம், 28 வங்கிகளிடம், 22 ஆயிரத்து 842 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்து உள்ளதாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா புகார் அளித்துள்ளது.
இதையடுத்து, ஏ.பி.ஜி., ஷிப்யார்டு நிறுவனர்கள் ரிஷி அகர்வால், சந்தானம் முத்துசுவாமி, அஸ்வினி குமார் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது. கடந்த வாரம், ரிஷி அகர்வால் வீட்டில் சி.பி.ஐ., சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து விசாரணைக்கு வருமாறு ரிஷி அகர்வாலுக்கு சி.பி.ஐ., ‘சம்மன்’ அனுப்பியது.
அதன்படி இன்று சி,பி.ஐ., அலுவலகத்திற்கு வந்த ரிஷி அகர்வாலிடம் வங்கி கடன் மோசடி தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையே, ரிஷி அகர்வால் உள்ளிட்டோர் மீது சட்ட விரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
ரிஷி அகர்வால் உள்ளிட்ட நிறுவனர்கள், போலியாக, 98 நிறுவனங்களை உருவாக்கி வங்கியில் கடன் பெற்று மோசடி செய்துள்ளதாக சி.பி.ஐ., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.