இந்தியாவில் புதிதாக 25,920 பேருக்கு கொரோனா; 492 பேர் சாவு
1 min read
Corona for 25,920 newcomers in India; 492 deaths
18/2/2022
இந்தியாவில் இன்று தினசரி கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. ஒரேநாளில் 25,920 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. 492 பேர் இறந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன்விவரம் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் 25 ஆயிரத்து 920 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தையநாள் பாதிப்பான 30 ஆயிரத்து 757 மற்றும் கடந்த புதன் கிழமை பாதிப்பான 30 ஆயிரத்து 615- ஐ விட குறைவாகும்.
இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 27 லட்சத்து 80 ஆயிரத்து 235 ஆக அதிகரித்துள்ளது.
இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 66 ஆயிரத்து 254 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 19 லட்சத்து 77 ஆயிரத்து 238 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்து 92 ஆயிரத்து 92 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
492 பேர் சாவு
ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் 492 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 10 ஆயிரத்து 905 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 174 கோடியே 64 லட்சத்து 99 ஆயிரத்து 461 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.