தமிழகத்தில் இன்று 1,051 பேருக்கு கொரோனா; 7 பேர் சாவு
1 min read
Corona for 1,051 people in Tamil Nadu today; 7 deaths
19.2.2022
தமிழகத்தில் இன்று 1,051 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. 7 பேர் உயிரிழந்துள்ளனர். 3,561 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று(பிப்ரவரி 18 ம் தேதி) 1,146 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்று (பிப்ரவரி 19ம் தேதி) பாதிப்பு 1,051 ஆக குறைந்துள்ளது.
கொரோனா
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் 82,053 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 1,051 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,43,980 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 623 பேர் ஆண்கள், 428 பேர் பெண்கள். இன்று 3,561 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 33,87,839 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 7 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,977 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 262 ஆக இருந்த நிலையில் இன்று (பிப்ரவரி 19 ம் தேதி) 238 ஆக குறைந்துள்ளது.
நெல்லையில் இன்று 10 பேருக்கும், தென்காசியில் 6 பேருக்கும், தூத்துக்குடியில் 11 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.