தமிழகத்தில் இன்று 261 பேருக்கு கொரோனா
1 min read
Corona for 261 people in Tamil Nadu today
4.3.2022
தமிழகத்தில் இன்று 261 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. 705 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று (மார்ச். 03 ம் தேதி) 292 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்று (மார்ச் 04 ம் தேதி) பாதிப்பு 261 ஆக குறைந்துள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழகத்தில் 51,284 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் 260 பேரும் மற்றும் பீகார் மாநிலம் சென்று திரும்பிய ஒருவரையும் சேர்த்து 261 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,50,594 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 6,46,09,137 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 156 பேர் ஆண்கள், 105 பேர் பெண்கள். இன்று 705 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,09,078 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக இன்று தஞ்சையில் மட்டும் ஒருவர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38,011 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்று 83 ஆக இருந்த நிலையில் இன்று (மார்ச் 04 ம் தேதி) 76 ஆக குறைந்துள்ளது.
நெல்லையில் 3 பேருக்கும் தூத்துக்குடியில் ஒருவருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.