தமிழகத்தில் இன்று 151 பேருக்கு கொரோனா; 2 பேர் சாவு
1 min read
Corona for 151 people in Tamil Nadu today; 2 deaths
8.3.2022
தமிழகத்தில் இன்று 151 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 2 பேர் இறந்துள்ளனர்.
கொரோனா
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. அந்த வகையில், இன்று 151 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனாவால் பாதிக்கப்பட்டு 2,145 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
கொரோனா தொற்றில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 418 ஆக உள்ளது. கொரோனா பாதிப்புக்கு இன்று உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2 ஆகும். தலைநகர் சென்னையில் 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.