June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

கோகுல்ராஜ் கொலை வழக்கு கடந்து வந்த பாதை

1 min read

The path traversed by the Gokulraj murder case

8.3.2022

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கோகுல் ராஜ் கொலை வழக்கில் 11 பேர் குற்றவாளிகள் என்று மதுரை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சம்பத்குமார் இன்று தீர்ப்பளித்தார்.

மேலும் குற்றம்சாட்டப்பட்டவர்களில் 5 பேர் விடுதலை என்றும் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் வருகிற 8-ந்தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோகுல்ராஜ் கொலை வழக்கு கடந்து வந்தபாதை குறித்து விரிவாக பார்க்கலாம்.

  • 2015 ஜூன் 23-ந் தேதி இரவு திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் சாமி கும்பிட சென்ற கோகுல்ராஜ் வீடு திரும்பாததால், அவருடைய பெற்றோர்கள் கோகுல்ராஜைத் தேடினர்.
  • ஜூன் 24-ந் தேதி பள்ளிப்பாளையம் அருகே தொட்டிபாளையம் ரெயில்வே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கோகுல்ராஜ் உடல் மீட்கப்பட்டது.
  • 25-ந் தேதி கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டதாக அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்.
  • 27-ந் தேதி பிரேத பரிசோதனை நடைபெற்றது
  • ஜூலை 2-ந் தேதி உடலை பெற்றோர்கள் வாங்கி அடக்கம் செய்தனர்.
  • இந்த கொலை தொடர்பாக யுவராஜ் உட்பட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
  • யுவராஜ், அவரது கூட்டாளிகள் 15 பேரும் நீண்ட நாட்கள் தலைமறைவாக இருந்தனர்.
  • செப்டம்பர் 18-ந்தேதி கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா தற்கொலை
  • கோகுல்ராஜ் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம்.
  • அக்டோபார் 11-ந் தேதி காலை 10.30 மணிக்கு நாமக்கல் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரணை அதிகாரிகள் முன்னிலையில் யுவராஜ் சரணடைந்தார்.
  • டிசம்பர் 25-ந்தேதி யுவராஜ், தங்கதுரை, அருள்செந்தில், செல்வக்குமார், குமார் (எ) சிவக்குமார், கார் ஓட்டுநர் அருண், சங்கர் ஆகிய 7 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
  • இவ்வழக்கு நாமக்கல் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் இருந்து வழக்கு விசாராணையை சேலம் சிறப்பு நீதிமன்றம் அல்லது வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி கோகுல்ராஜின் தாய் சித்ரா கடந்த 2019-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு.
  • கோகுல்ராஜ் வழக்கில் சுவாதி உட்பட மொத்தம் 116 சாட்சிகள் சேர்க்கப்பட்டு விசாரணை.
  • 2019ம் ஆண்டு மே 5-ந் தேதி முதல் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு.
  • 2022 பிப்ரவரி மாதம் வழக்கு விசாரணை நிறைவு
  • 2022 மார்ச் 5-ந் தேதி இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.