தமிழகத்தில் இன்று 147 பேருக்கு கொரோனா; 2 பேர் சாவு
1 min read
Corona for 147 people in Tamil Nadu today; 2 deaths
9.3.2022
தமிழகத்தில் இன்று 147 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. 387 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று (மார்ச் 8- ம் தேதி) 151 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்று (மார்ச் 09 ம் தேதி) பாதிப்பு 147 ஆக குறைந்துள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
தமிழகத்தில் 41,648 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் 145பேரும் ஆந்திரா மாநிலம் சென்று திரும்பிய ஒருவர் மற்றும் துபாயில் இருந்து வந்த ஒருவரையும் சேர்த்து 147 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,51,469 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 81 பேர் ஆண்கள், 66 பேர் பெண்கள். தமிழகத்தில் 387பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,11,545ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக அரசு மருத்துவமனையில் இருவர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38,021ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்று 56 ஆக இருந்த நிலையில் இன்று (மார்ச் 09 ம் தேதி) 47 ஆக குறைந்துள்ளது.