June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

பஞ்சாபில் கேப்டன் அமரீந்தர் சிங் தோல்வி

1 min read

Captain Amarinder Singh loses in Punjab

10.3.2022
பஞ்சாப் முன்னாள் முதல்-மந்திரி கேப்டன் அமரீந்தர் சிங் தோல்வி அடைந்தார்.

அமரீந்தர் சிங்

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. அந்த மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் ஆட்சியை இழந்தது.

இந்நிலையில், பாட்டியாலா தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்-மந்திரி கேப்டன் அமரீந்தர் சிங்(பிஎல்சி கட்சி) பின்னடைவை சந்தித்து வந்தார். இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ்( பிஎல்சி) என்ற புதிய கட்சியை தொடங்கினார்.
இந்த தேர்தலில் பாரதீய ஜனதாவானது தனது நீண்டகால கூட்டாளியான எஸ்ஏடி(சிரோன்மணி அகாலிதளம்) கட்சியை விட்டு பிரிந்து, அமரீந்தர் சிங்கின் புதிய கட்சியான பிஎல்சி மற்றும் எஸ்ஏடி (சன்யுக்த்) உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

தோல்வி

இந்நிலையில், பாஜக கூட்டணியில் களம் கண்ட அமரீந்தர் சிங்கை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் அஜித் பால் சிங் கோலி போட்டியிட்டார். இதில் அமரீந்தர் சிங் தோல்வி அடைந்தார். ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் அஜித் பால் சிங் கோலி 13 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பஞ்சாப் மாநில முன்னாள் முதல்-மந்திரி கேப்டன் அமரீந்தர் சிங் அடைந்த இந்த படுதோல்வி அவருடைய அரசியல் எதிர்காலத்திற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அவரை போலவே காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

இந்த நிலையில் தோல்வி குறித்து முன்னாள் முதல்-மந்திரி கேப்டன் அமரீந்தர் சிங் வெளிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மக்களின் தீர்ப்பை முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறேன். பஞ்சாபியர்கள் மதவெறி மற்றும் சாதிக் கோடுகளுக்கு அப்பால் உயர்ந்து வாக்களிப்பதன் மூலம் பஞ்சாபியத்தின் உண்மையான உணர்வைக் காட்டியுள்ளனர். பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சி மற்றும் பகவந்த் மான்க்கு வாழ்த்துக்கள் ” என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.