தமிழகத்தில் இன்று 129 பேருக்கு கொரோனா; 2 பேர் சாவு
1 min read
Corona for 129 people in Tamil Nadu today; 2 deaths
10.3.2022
தமிழகத்தில் இன்று 129 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. 354 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று 147 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்று பாதிப்பு ஆக குறைந்துள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழகத்தில் 42,026 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் 129 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,51,598 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 62 பேர் ஆண்கள், 67 பேர் பெண்கள். இன்று 354 பேர் கொரோனாவால் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதைத் தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,11,899 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர். சென்னை, கோவை மாவட்டத்தில் இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்று 47 ஆக இருந்த நிலையில் இன்று (மார்ச் 10 ம் தேதி) 44 ஆக குறைந்துள்ளது.
தென்காசி, தூத்துக்குடியில் தலா ஒருவருக்கும், தென்காசியில் 2 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.