தமிழகத்தில் 105 பேருக்கு கொரோனா; இறப்பு இல்லை
1 min read
Corona for 105 people in Tamil Nadu; There is no death
12.3.2022
தமிழகத்தில் இன்று 105 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. 265 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று 112 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்று பாதிப்பு 105 ஆக குறைந்துள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
மேலும் குறைந்தது
தமிழகத்தில் 43,127 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் 105 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,51,815 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 61 பேர் ஆண்கள், 44 பேர் பெண்கள். இன்று 265 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதைத் தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,12,491 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழப்பு இல்லை
கொரோனா பாதிப்பு காரணமாக இன்று யாரும் உயிரிழக்கவில்லை.இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38,023 ஆகவே உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்று 42 ஆக இருந்த நிலையில் இன்று 39 ஆக குறைந்துள்ளது. பாதிப்பு இருந்த நிலையில் இன்று பாதிப்பு 105 ஆக குறைந்துள்ளது.
நெல்லையில் 2 பேருக்கும், தென்காசியில் ஒருவருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.