தோரணமலையில் பஞ்ச வாத்தியங்கள் முழங்க வருண கலச பூஜை
1 min read
Varuna kalasa puja to play pancha instruments in Thoranamalai
12.3.2022
தோரணமலை முருகன்கோவிலில் விவசாயம் தழைக்க வேண்டி வருண கலச பூஜை நடைபெற்றது.
தோரணமலை
தென்காசி- கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன்கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாத கடைசிவெள்ளியன்றும், மழை வேண்டியும், விவசாயம் தழைக்க வேண்டியும் வருண கலச பூஜை நடைபெற்று வருகிறது.
இதைத்தொடர்ந்து மாசி மாத கடைசி வெள்ளிக்கிழமை அன்று வருண கலச பூஜை நடைபெற்றது. இதற்காக அதிகாலையில் பக்தர்கள் மலை உச்சியில் உள்ள சுனையில் இருந்து கிரக குடம் எடுத்து வந்தனர்.
தொடர்ந்து சப்த கன்னியர்கள், விநாயகர் மற்றும் தெய்வங்களுக்கும், மலை அடிவாரத்தில் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, நெல் நாற்று வைத்து வருண கலச பூஜை நடைபெற்றது.
மேலும் மலை உச்சியில் உள்ள பத்திரகாளியம்மன் மற்றும் முருகருக்கு சிறப்பு அபிஷேகம், தென்காசி சிவ பூதகண நாதர் வாத்திய குழுவினரின் பஞ்ச வாத்தியங்கள் முழங்க தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் தலைமையில் செய்திருந்தனர்.