ஆவடி துணை ஆணையர் அலுவலகம் அருகே 2 பேர் கொலை
1 min read
2 killed near Avadi Deputy Commissioner’s office
13.2.2022
ஆவடி துணை ஆணையர் பின்புறம் உள்ள மைதானத்தில் இருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
கொலை
சென்னை ஆவடி மசூதி தெருவை சேர்ந்தவர் பாஷா. இவரது மகன் அரசு என்கின்ற அசருதீன் (27) மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவரது நண்பர் சுந்தர் (29) கௌரி பேட்டை ஆட்டோ ஓட்டுநர். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் இவர்கள் இருவரும் ஆவடி துணை ஆணையர் பின்புறம் உள்ள மைதானத்தில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில் வெகு நேரம் ஆகியும் மகன் வீட்டிற்கு வராததால் மகனை தேடி வந்துள்ளார் இந்நிலையில் அசருதீன் மற்றும் சுந்தர் இருவரும் முகத்தில் வெட்டுப்பட்ட நிலையில் இறந்து கிடப்பதாக அசருதீன் தந்தை அன்வர் பாஷா ஆவடி காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்துள்ளார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும் இருவரையும் வேறு ஏதேனும் இடத்தில் கொலை செய்துவிட்டு உடலை இங்கு கொண்டு வந்து வீசிவிட்டு சென்றார்களா அல்லது ஓ.சி.எப். மைதானத்தில் தான் கொலை நடந்ததா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நடந்த கொலை தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் ஆவடி பகுதியை சேர்ந்த ஜெகன் (30) , யாசின் (26) என இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.