தமிழகத்தில் இன்று 61 பேருக்கு கொரோனா; இறப்பு இல்லை
1 min read
Corona for 61 people in Tamil Nadu today; There is no death
18.3.2022
தமிழகத்தில் இன்று 61 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. 127 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று (மார்ச்17 ம் தேதி) 70 பேருக்கு கோவிட் பாதிப்பு இருந்த நிலையில் இன்று (மார்ச் 18 ம் தேதி) பாதிப்பு 61 ஆக குறைந்துள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் 38,500 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் 61 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,52,276 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 29 பேர் ஆண்கள், 32 பேர் பெண்கள். தமிழகத்தில் 127 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதைத் தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,13,521 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழப்பு இல்லை
கொரோனா பாதிப்பு காரணமாக இன்று உயிரிழப்பு இல்லை. இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38,025 ஆக உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்று ( மார்ச் 17 ம் தேதி) 20 ஆக இருந்த நிலையில் இன்று (மார்ச் 18ம் தேதி) 19 ஆக குறைந்துள்ளது.
இன்று தூத்துக்குடியில் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.