June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

நண்பரை காப்பாற்ற அடுத்தடுத்து ஆற்றில் குதித்த 6 பேர் சாவு

1 min read

6 people die after jumping into a river in a row to save a friend

20.3.2022

ஒடிசாவில் குளிக்க சென்ற இடத்தில் நீரில் மூழ்கிய நண்பர்களை காப்பாற்ற அடுத்தடுத்து ஆற்றில் குதித்த 6 பேர் உயிரிழந்த சோகம் ஏற்பட்டு உள்ளது.

ஆற்றில் குளிக்க..

ஒடிசாவின் ஜஜ்பூர் நகரில் கரஸ்ரோட்டா ஆற்றில் ஹோலி பண்டிகையை கொண்டாடி விட்டு குளிப்பதற்காக நண்பர்கள் சிலர் ஆற்றுக்கு சென்றுள்ளனர். அவர்களில் ஒருவர் திடீரென ஆற்றில் மூழ்கியுள்ளார். இதனை கவனித்த அருகில் இருந்த மற்றொருவர் அவரை காப்பாற்ற சென்றிருக்கிறார்.
இதில் அவரும் நீருக்குள் மூழ்கி உள்ளார். இதுபோன்று தங்களுடைய நண்பர்களை காப்பாற்றுவதற்காக அடுத்தடுத்து 6 பேர் சென்று அவர்கள் அனைவரும் ஆற்றில் மூழ்கி உள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்து, உள்ளூர்வாசிகள் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்றுள்ளனர். அவர்களில் சிலர் ஆற்றில் நீந்தி சென்று, ஒருவரது உடலை மீட்டனர். சம்பவம் பற்றி ஒடிசா தீயணைப்பு துறை மற்றும் பேரிடர் அதிரடி விரைவு படைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

அவர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில், 2 உடல்களை அவர்கள் மீட்டனர். இதுவரை 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. மற்ற 3 பேரை தேடும் பணி நடந்து வருகிறது என்று செய்தியாளர்களிடம் மாவட்ட தீயணைப்பு துறை உதவி அதிகாரி பூர்ண சந்திர மராண்டி கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.