இந்தியாவில் புதிதாக 1,778 பேருக்கு கொரோனா; 62 பேர் சாவு
1 min read
Corona for 1,778 newcomers in India; 62 deaths
23.3.2022
இந்தியாவில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. ஒரு நாளில் புதிதாக 1,778 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. 62 பேர் இறந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன்விவரம் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 1 ஆயிரத்து 778 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய நாள் பாதிப்பான 1 ஆயிரத்து 581- ஐ விட அதிகமாகும்.
இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 12 ஆயிரத்து 749 ஆக அதிகரித்துள்ளது.
இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 2 ஆயிரத்து 542 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 73 ஆயிரத்து 57 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 23 ஆயிரத்து 87 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
62 பேர் சாவு
ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு ஒரு நாளில் 62 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 16 ஆயிரத்து 605 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 181 கோடியே 89 லட்சத்து 15 ஆயிரத்து 234 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவலை இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.