தமிழகத்தில் இன்று 41 பேருக்கு கொரோனா
1 min read
Corona for 41 people in Tamil Nadu today
24.3.2022
தமிழகத்தில் இன்று புதிதாக 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் இன்று 32,003 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், புதிதாக 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதல் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த 34,25,275 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 71 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,14,075 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது 475 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் புதிதாக 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செயப்பட்டுள்ளது தமிழகத்தில் இன்று கொரோனாவால் உயிரிழப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.