இந்தியாவில் மேலும் 1,938 பேருக்கு கொரோனா; 62 பேர் சாவு
1 min read
Corona for another 1,938 in India; 62 deaths
24.3.2022
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மேலும் சற்று அதிகரித்துள்ளது. மேலும் 1,938 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. 62 பேர் இறந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரங்களை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டது. அதன் விவரதம் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 1,938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய நாள் பாதிப்பான 1,778ஐ விட சற்று அதிகமாகும்.
இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 14 ஆயிரத்து 687 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 22 ஆயிரத்து 427 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 2 ஆயிரத்து 531 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 75 ஆயிரத்து 588 ஆக அதிகரித்துள்ளது.
62 பேர் சாவு
கொரோனா தாக்குதலுக்கு நேற்று 62 பேர் உயிரிழந்த நிலையில், நேற்று மட்டும் 67 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 16 ஆயிரத்து 672 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 182 கோடியே 23 லட்சத்து 30 ஆயிரத்து 356 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தடுப்பூசி
12-14 வயதிற்குட்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி, மார்ச் 16, 2022 அன்று தொடங்கப்பட்டது. இதுவரை, 72 லட்சத்திற்கும் அதிகமான (72,17,166) இளம் பருவத்தினருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றிலிருந்து மீள்வோர் விகிதம் 98.75 சதவீதமாக உள்ளது.