வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு காளான் வளர்ப்பு பயிற்சி
1 min read
Mushroom cultivation training for agricultural college students
24.3.2022
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை, வேளாண் ௧ல்லூரி இறுதி ஆண்டு மாணவிகளின் 11 பேர் கொண்ட குழு கிராமப்புற வேளாண் ௮னுபவப் பயிற்சிக்காக கோவை மாவட்டம், ௮ன்னூரில் தங்கி உள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக காளான் வளர்ப்பு குறித்து லோகநாதன் மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார்.
“காளான் வளர்ப்பு என்பது லாபம் கிடைக்கக்கூடிய ஒர் தொழில்நுட்பமாகும். காளான் தோன்றும் அறையில் 23 முதல் 25°செல்சியஸ் வெப்ப நிலையும் காற்றின் ஈரப்பதம் 85 சதவிகிதத்திற்கு மேலும் இருக்க வேண்டும்” என்று அவர் எடுத்துரைத்தார்.
இவர் சிற்பி காளான் மற்றும் முட்டு காளான் என்ற இரண்டு வகையான காளான்களை வளர்க்கிரார். காளானில் ஏற்படும் நோய்களையும் அதனை எவ்வாறு தவிர்க்க வேண்டும் என்பதனையும் எடுத்துக்கூறினார். காளான் வளர்ப்பினை முழு சுகாதாரத்துடன் கையாள வேண்டும் என்றும் கூறினார்.