June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 30 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 30 people in Tamil Nadu today

2.4.2022
தமிழகத்தில் இன்று 30 பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டு உள்ளது. 39 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று (ஏப்ரல் 1 ம் தேதி) 32 பேருக்கு கோவிட் பாதிப்பு இருந்த நிலையில் இன்று (ஏப்ரல் 2 ம் தேதி) பாதிப்பு 30 ஆக சற்று குறைந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழகத்தில் 24,798 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் 30 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 34,52,887 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 6,56,50,547 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கொரோனா உறுதியானவர்களில் 13 பேர் ஆண்கள், 19 பேர் பெண்கள். இன்று 39 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதைத் தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,14,578 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக இன்று உயிரிழப்பு இல்லை. இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38,025 ஆக உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

சென்னை

சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்று ( ஏப்ரல் 1 ம் தேதி) 14 ஆக இருந்த நிலையில் இன்று ( ஏப்ரல் 2 ம் தேதி) 12 ஆக சற்று குறைந்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.