June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

விதைகளை தரம்பிரிக்கும் பயிற்சி; மாணவிகள் பங்கேற்பு

1 min read

Seed grading training; Student participation

2.4.2022
கோவை வேளாண் கல்லூரி மாணவிகள் விதைகளை தரம்பிக்கும் பயிற்சி பெற்றனர்.

மாணவிகள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை, வேளாண் ௧ல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் பா.சாருமதி, ஜெ.துர்காதேவி, ப.கீதாலட்சுமி ,ஜோதி யாகன்டி , கு.கீர்த்தனா பிரியா, ரா.மின்னுஷா, ரா.முத்துச்செல்வி, செ.நந்தினி, மா.பிரியதர்ஷினி, அ.சிநேகா மற்றும் ஷ. ஸ்ரீநிதி ஆகிய 11 பேர் கொண்ட குழுவினர் கிராம தங்கள் திட்டத்தின் கீழ் அன்னூரில் தற்போது தங்கி அன்னூர் வட்டாரத்திற்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள வேளாண் தொழிலகத்தில் அனுபவ பயிற்சி பெற்று வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக வேளாண் தொழிலகமான விஜயராஜா அக்ரோ ஹி டெக் (பி) லிமிடெட் தொழில் நிறுவனத்தில் பங்கேற்று பயிற்சி பெற்று வந்தனர். இப்பயிற்சியில் விதையை எவ்வாறு தரம் பிரிப்பது, அதனை சரியான ஈரப்பதத்திற்கு கொண்டு வருவது மற்றும் விதை தொகுப்பதனை பற்றியும் விரிவாக கற்று அறிந்தனர். இதில் மாணவிகள் விதைகளை உலர வைப்பதில் பங்குகொண்டார்கள். மேலும் இப்பயிற்சி பெற்றதற்காக சான்றிதழ் அந்நிறுவனத்தால் அளிக்கப்பட்டன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.