இந்தியாவில் புதிதாக 1,086 பேருக்கு கொரோனா; 71 பேர் சாவு
1 min read
Corona for 1,086 newcomers in India; 71 deaths
6.4.2022
இந்தியாவில் புதிதாக 1,086 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒரே நாளில் 71 பேர் இறந்தனர்.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன்விவரம் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை வரைகடந்த 24 மணி நேரத்தில் 1 ஆயிரத்து 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரு நாட்களாக (நேற்று 795, திங்கட்கிழமை 913) தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கு கீழ் பதிவான நிலையில் தற்போது பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது.
இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 30 ஆயிரத்து 925 ஆக அதிகரித்துள்ளது.
இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1 ஆயிரத்து 198 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 97 ஆயிரத்து 567 ஆக அதிகரித்துள்ளது.
71 பேர் சாவு
நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 11 ஆயிரத்து 871 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு ஒரு நாளில் 71 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 21 ஆயிரத்து 487 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 185 கோடியே 4 லட்சத்து 11 ஆயிரத்து 569 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.