பிரதமர் மோடி, சோனியாகாந்தி, முலாயம் சிங் யாதவ் சந்திப்பு
1 min read
Meeting with Prime Minister Modi, Sonia Gandhi and Mulayam Singh Yadav
7.4.2022
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்ததும்,
சோனியாகாந்தி, பரூக் அப்துல்லா, முலாயம் சிங் யாதவ்
மற்றும் பிற தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி
சந்தித்துப் பேசினார்.
பட்ஜெட் கூட்டம்
நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் தற்போது
பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நடைபெற்று
வருகிறது. மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய
இரு அவைகளும் நாளையுடன் நிறைவடையும் என
அறிவிக்கப்பட்ட நிலையில், முன்கூட்டியே இன்றே
முடித்துக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரு
அவைகளும் மறு தேதி குறிப்பிடாமல்
ஒத்திவைக்கப்பட்டது.
மத்திய பட்ஜெட் மற்றும் அதுதொடர்பான நிதி
மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், சில
முக்கிய சட்டத்திருத்த மசோதாக்களும் இரு
அவைகளிலும் நிறைவேறி உள்ளன. இதில், குற்றவியல்
நடைமுறை, டெல்லி மாநகராட்சி மசோதா உள்ளிட்ட
மசோதாக்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த அமர்வில் அனைவரின் பங்கேற்புடன் செயல்பாடு
129% ஆக இருந்தது. 8-வது அமர்வு வரை செயல்பாடு
106% ஆக இருந்தது. முந்தைய அனுபவங்களுடன்
ஒப்பிடுகையில், அனைவரின் ஆதரவுடன் தற்போது
நடைபெற்று வரும் கூட்டத்தொடர் சிறப்பாக
நடைபெற்றது” என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா
தெரிவித்துள்ளார்.
அதுபோலவே பட்ஜெட் கூட்டத்தொடரில்
மாநிலங்களவையின் செயல்பாடு 99.8 சதவீதம் என்ற
அளவில் இருந்துள்ளது.
தலைவர்கள் சந்திப்பு
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்ததும்,
காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி, தேசிய
மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி
கட்சியின் மூத்த முலாயம் சிங் யாதவ் மற்றும் பிற
தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப்
பேசினார். பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், மக்களவை
சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.