தமிழகத்தில் இன்று 26 பேருக்கு கொரோனா
1 min read
orona for 26 people today in Tamil Nadu
7.4.2022
தமிழகத்தில் இன்று 26 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டு உள்ளது. 37 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று (ஏப்ரல் 6 ம் தேதி) 30 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்று (ஏப்ரல் 7 ம் தேதி) பாதிப்பு 26 ஆக சற்று குறைந்துள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழகத்தில் 21,635 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் 26 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 34,53,011 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 14 பேர் ஆண்கள், 12 பேர் பெண்கள். 37 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதைத் தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,14,739 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக இன்று உயிரிழப்பு இல்லை. இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38,025 ஆக உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நேற்று இருந்த நிலையிலே உள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்று ( ஏப்ரல் 6 ம் தேதி) 12 ஆக இருந்த நிலையில் இன்றும் ( ஏப்ரல் 7 ம் தேதி) ஆக 12 உள்ளது.