June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் புதிதாக 1,109 பேருக்கு கொரோனா; 43 பேர் சாவு

1 min read

Corona for 1,109 newcomers in India; 43 deaths

8.4.2022
இந்தியாவில் புதிதாக மேலும் 1,109 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தினசரி கொரோனா பலி எண்ணிக்கை 43 ஆக சரிந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா நிலவரம் பற்றி இன்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவல் வருமாறு:-

இந்தியாவில் கடந்த புதன்கிழமை 1,086 வியாழக்கிழமை 1,033 ஆக இருந்த நிலையில் இன்று கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து 1,109 ஆனது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,30,31,958 லிருந்து 4,30,33,057 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 1,213 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

43 பேர் சாவு

நாடு முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,24,98,789 லிருந்து 4,25,00,002 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 43 பேர் உயிரிழந்தனர். இதுவரை 5,21,573 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 11,492 ஆக குறைந்தது. இந்தியாவில் ஒரே நாளில் 16,80,118 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 185.38 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.