இந்தியாவில் தினசரி கொரோனா 796 பேரா குறைந்தது; 19 பேர் சாவு
1 min read
Daily corona 796 para low in India; 19 dead
12.4.2022
இந்தியாவில் தினசரி கொரோனா 796 பேரா குறைந்தது. ஒரு நாளில் 19 பேர் இறந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கொரோனா 3-வது அலை முற்றிலும் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது. கடந்த 4-ந்தேதி தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்குள் வந்தது. அதன்பிறகு சற்று ஏறுமுகமாக இருந்தது. நேற்று முன்தினம் 1,054 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் ஆயிரத்துக்குள் வந்தது. இதன்படி நேற்று 861 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று புதிதாக 796 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 796 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,30,36,928 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,21,710 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 946 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,25,04,329 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 10,889 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 1,85,90,68,616 பேருக்கு (இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 15,65,507 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 4,06,251 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 79,45,25,202 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.