தமிழகத்தில் இன்று 22 பேருக்கு கொரோனா
1 min read
Corona for 22 people in Tamil Nadu today
15.4.2022
தமிழகத்தில் இன்று 22 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
தமிழகத்தில் மேலும் 22 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 53 ஆயிரத்து 210- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக புதிதாக உயிரிழப்பு எதுவும் இல்லை. இன்று கொரோனா பாதிப்பு பதிவானவர்களில் ஒருவர் இங்கிலாந்தில் இருந்து வந்தவர். சென்னை விமான நிலையத்தில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ததில் அவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 22 பேரில் 10 பேர் ஆண்கள், 10 பேர் பெண்கள் ஆவர். தொற்றில் இருந்து 24 பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 14 ஆயிரத்து 957- ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 228- ஆக உள்ளது. சென்னையில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 17,133- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.