June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 30 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 30 people in Tamil Nadu today

19/4/2022
தமிழகத்தில் இன்று 30 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை இன்று மாலை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

தமிழகத்தில் இன்று புதிதாக 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 53 ஆயிரத்து 320- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 27 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக புதிதாக உயிரிழப்பு இல்லை.

கொரோனா தொற்றைக் கண்டறிய 13,446 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக சென்னையில் 17 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 30 மாவட்டங்களில் இன்று தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.