June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் புதிதாக 2,451 பேருக்கு கொரோனா; 54 பேர் சாவு

1 min read

Corona for 2,451 newcomers in India; 54 deaths

22.4.2022
இந்தியாவில் புதிதாக 2,451 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒரு நாளில் 54 பேர் இறந்து உள்ளனர்.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன்வ விவரம் வரருமாறு:-
இந்தியாவில் கடந்த இன்று 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 451 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றுயை பாதிப்பை விட அதிகமாகும்.

இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 52 ஆயிரத்து 435 ஆக அதிகரித்துள்ளது.

இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1 ஆயிரத்து 589 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 16 ஆயிரத்து 068 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 14 ஆயிரத்து 241 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தாக்குதலுக்கு ஒரு நாளில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 22 ஆயிரத்து 116 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 18,03,558 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,87,26,26,515 ஆக உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.