June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் புதிதாக 2,483 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 2,483 newcomers in India

26-4.2022
இந்தியாவில் புதிதாக 2 ஆயிரத்து 483 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 483 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 2 ஆயிரத்து 541-ஐ விட குறைவாகும்.

இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 62 ஆயிரத்து 569 ஆக அதிகரித்துள்ளது.

இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1 ஆயிரத்து 970 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 23 ஆயிரத்து 311 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 15 ஆயிரத்து 636 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தாக்குதலுக்கு மேலும் 1 ஆயிரத்து 347 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. கேரளா (47) மற்றும் அசாமில் (1,347) ஏற்கனவே உயிரிழந்து மாநில பட்டியலில் சேர்க்கப்படாத எண்ணிக்கை மறுகணக்கீட்டின்படி சேர்க்கப்பட்டதால் இன்று அதிக அளவிலான உயிரிழப்பு பதிவானதற்கு காரணமாகும்.

இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 23 ஆயிரத்து 622 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 187 கோடியே 95 லட்சத்து 76 ஆயிரத்து 423 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.