தருமபுரம் ஆதீன பல்லக்தை தோளில் சுமப்பேன்-அண்ணாமலை டுவிட்டர் உறுதி
1 min read
I will carry Dharmapuram Aadeena Pallak on my shoulders-Annamalai Twitter confirms
4.5.2022
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தருமபுரம் ஆதீனம் நிகழ்ச்சியை உயிரை கொடுத்தாவது நடத்துவோம் என்றும் ஆதீன பல்லகத்தை எனது தோளில் சுமந்து செல்வேன் என்றும் கூறியுள்ளார்.
தரும்புரம் ஆதீனம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரம் ஆதீனமடத்தில் பட்டின பிரவேசம் என்பது 500 ஆண்டுகாலம் பாரம்பரிய நிகழ்ச்சி.
இந்த நிகழ்வின் போது தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்வது வழக்கம். தருமபுரம் ஆதீன மடத்தில் பட்டின பிரவேசம் நிகழ்வுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இந்த நிலையில் பட்டின பிரவேசத்தை உயிரை கொடுத்தாவது நடத்துவோம் என்று மதுரை ஆதீனம் தெரிவித்திருக்கிறார். அரசு தனது நிலைபாட்டை மாற்ற வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
அண்ணாமலை
இந்த நிலையில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தருமபுரம் ஆதீனம் நிகழ்ச்சியை உயிரை கொடுத்தாவது நடத்துவோம் என்றும் ஆதீன பல்லக்கை தனது தோளில் சுமந்து செல்வேன் என்றும் கூறியுள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
தருமபுர ஆதீனத்தின் பல நூற்றாண்டுகள் பழமையான ‘பட்டின பிரவேசம்’ மீதான தடை தமிழக நாகரிகம் மற்றும் கலாச்சாரத்திற்கு எதிரானது. ஆதீனத்தைத் தோளில் சுமக்க நான் நேரில் வருவேன் என்பதைத் தமிழக அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த சட்டவிரோத உத்தரவை எதிர்த்து நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்குமாறு ஆதீனத்திடம் கோரிக்கை வைப்போம்.
தமிழக பா.ஜ.க. இந்த நிகழ்ச்சியை நடத்திக் காட்ட தயாராக இருக்கிறது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.