July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுடப்பட்ட காவலர் சாவு

1 min read

Policeman shot dead by terrorists in Kashmir

7.5.2022
காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுடப்பட்ட காவலர் இறந்தார்.

பயங்கரவாதிகள்

ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் அலி ஜான் சாலையில் ஐவா பாலத்தில் நேற்று காலையில் குலாம் ஹசன் என்ற காவலர் சென்று கொண்டிருந்து உள்ளார். அவரிடம் ஆயுதங்கள் எதுவும் இல்லை.
இந்நிலையில், அவரை நோக்கி பயங்கரவாதிகள் சிலர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதற்கான சரியான காரணம் என்னவென்று தெரிய வரவில்லை. இதில் பலத்த காயமடைந்த குலாம், சவுரா பகுதியில் உள்ள எஸ்.கே. மருத்துவ அறிவியல் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.

எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார் என நேற்று இரவு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எல்லையில் ஊடுருவ 200 பயங்கரவாதிகள் தயார் நிலையில் உள்ளனர் என கூறப்பட்ட சூழலில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது. தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடி பிடிக்கும் பணி நடந்து வருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.