July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் புதிதாக 2,288 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 2,288 newcomers in India

10.5.2022
இந்தியாவில் மீண்டும் 3 ஆயிரத்துக்கும் கீழ் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்தது. ஒரே நாளில் 2,288 பேருக்கு கொரோனா கண்டறிப்பட்டது.

இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 2,288 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று 3 ஆயிரத்து 207 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று இந்த எண்ணிக்கை மேலும் குறைந்தது. இதன் காரணமாக, இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4,31,07,689 ஆக உயர்ந்தது.

இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில், 3,044 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர். இதனால் நாடு முழுவதும் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,25,63,949 ஆக உயர்ந்தது.

10 பேர் சாவு

ஆனால், சிகிச்சை பலனின்றி 10 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம், நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 5,24,103 ஆக உயர்ந்தது.தற்போது சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 19,637 ஆக உள்ளது.

இந்தியாவில் நேற்று மட்டும் 13,90,912 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், நாடு முழுவதும் இதுவரை 190 கோடியே 50 லட்சத்து 86 ஆயிரத்து 706 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.