தமிழகத்தில் இன்று 31 பேருக்கு கொரோனா
1 min read
Corona for 31 people in Tamil Nadu today
16/5/2022
தமிழகத்தில் இன்று 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் இன்று புதிதாக 20 ஆண்கள், 11 பெண்கள் என மொத்தம் 31 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 16 பேர் உள்பட 8 மாவட்டங்களில் மட்டும் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. 30 மாவட்டங்களில் யாரும் புதிதாக பாதிக்கப்பட்டவில்லை.
அரியலூர், தர்மபுரி உள்பட 15 மாவட்டங்கள் கொரோனாவே இல்லாத மாவட்டங்களாக உருவாகி உள்ளது. இந்த மாவட்டங்களில் யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பும் இல்லை, சிகிச்சையிலும் ஒருவர் கூட இல்லை.
தொடர்ந்து 2 மாதமாக எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரி
புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 25 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஒருவருக்கு மட்டும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று ஒருவர் குணமடைந்தார். தற்போது ஏனாமில் 8 பேர், புதுச்சேரியில் 6 பேர், காரைக்காலில் ஒருவர் என 15 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர்.