July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணிப்பு

1 min read

Dedication to the country of 2 warships made entirely in India

17.5.2022
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு மந்திரி ராஜ்நாத் சிங் அர்ப்பணித்தார்.

போர்க்கப்பல்கள்

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘சூரத்’, ‘உதய்கிரி’ போர்கப்பல்கள் கடற்படைக்கு அர்பணிக்கும் விழா மும்பை மஜ்காவ் டாக்கில் நடந்தது. விழாவில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு 2 போர் கப்பல்களையும் நாட்டுக்கு அர்பணித்தார். ஒரே நேரத்தில் 2 போர் கப்பல்கள் சேவை தொடங்கி வைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இந்த போர் கப்பல்கள் மஜ்காவ் டாக் கப்பல் கட்டும் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டதாகும். இதில் ‘சூரத்’ 15-பி டெஸ்டிராயர் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட 4-வது போர்க்கப்பல் ஆகும். இதற்கு மேற்கு இந்தியாவில் மும்பைக்கு பிறகு பெரிய வணிக மையமாக உள்ள குஜராத் மாநிலத்தின் தலைநகரான சூரத்தின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

‘உதய்கிரி’ 17-ஏ பிரிகேட்ஸ் திட்டத்தின் கீழ் தயாரான 3-வது போர்க்கப்பல் ஆகும். இதற்கு ஆந்திராவின் மலைச்சிகரமான உதய்கிரியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த கப்பலில் நவீன ஆயுதங்கள், சென்சார்கள், பிளாட்பாரம் நிர்வாக திட்டம் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளதாக கடற்படை தெரிவித்து உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.