தமிழகத்தில் இன்று 43 பேருக்கு கொரோனா
1 min read
Corona for 43 people in Tamil Nadu today
22.5.2022
தமிழகத்தில் இன்று புதிதாக 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 36 பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் மட்டும் 25 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் இன்று(மே 22) 13,682 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் 43 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,54,890 ஆக உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 22 பேர் ஆண்கள், 21 பேர் பெண்கள். இன்று 36 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,16,537 ஆக உள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக இன்று உயிரிழப்பு இல்லை. இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38,025 ஆக இருக்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்று (மே 21) 25 ஆக இருந்த நிலையில் இன்று (மே 22) 23 ஆக உள்ளது.