இந்தியாவில் தினசரி பாதி்பபு 5,233 பேரை தாண்டியது
1 min read
The daily incidence in India exceeds 5,233
8.6.2022
இந்தியாவில் தினசரி கொரோனா மீண்டும் 5 ஆயிரத்தை கடந்தது. ஒரே நாளில் 5,233 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் சமீப காலமாக கேரளா, மராட்டியம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. சுகாதார அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட அறிவிப்பின்படி, 3,714 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு பதிவானது.
இந்த நிலையில், கொரோனா பாதிப்பு இன்று அதிகரித்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட அறிவிப்பின்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,233 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
7 பேர் சாவு
நேற்று வெளியிட்ட அறிவிப்பின்படி, கொரோனாவுக்கு 7 பேர் உயிரிழந்த நிலையில், இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 7 பேர் உயிரிழந்தனர். கொரோனா பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 715 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 28 ஆயிரத்து 857 ஆக உள்ளது. இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 3,345 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர்.
இந்தியாவில் நேற்று மட்டும் 14,94,086 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை நாடு முழுவதும், மொத்தம் 194 கோடியே 43 லட்சத்து 26 ஆயிரத்து 416 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.