June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் புதிதாக 7,240 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 7,240 newcomers in India

9.6.2022
இந்தியாவில் புதிதாக 7,240 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா

நாட்டில் சமீப காலமாக கேரளா, மராட்டியம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பின்படி, 5,233 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு பதிவானது. இந்த நிலையில், கொரோனா பாதிப்பு இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.
சுகாதார அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,240 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,31,97,522 ஆக உயர்ந்துள்ளது.

8பேர் சாவு

இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 8 பேர் உயிரிழந்தனர். கொரோனா பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 723 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் 32 ஆயிரத்து 498 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 3,591 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,26,40,301 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் நேற்று மட்டும் 15,43,748 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை நாடு முழுவதும், மொத்தம் 194 கோடியே 59 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.