பீகார், உத்தர பிரதேச மாநிலங்களுக்கு இயக்கப்படும் ரெயில்கள் தற்காலிகமாக ரத்து
1 min read
16/6/2022-
போராட்டம் காரணமாக பீகார், உத்தர பிரதேசம் மாநிலங்களுக்கு இயக்கப்படும் அனைத்து ரெயில்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
அக்னிபத்
ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றில் 4 ஆண்டுகளுக்கு இளைஞர்களை தேர்வு செய்யும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கும் பீகாரில் ராணுவ வேலைவாய்ப்பை எதிர்நோக்கி உள்ள இளைஞர்கள் 3-வது நாளாக தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
உத்தரபிரதேசத்திலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், போராட்டம் காரணமாக பீகார், உத்தர பிரதேசம் மாநிலங்களுக்கு இயக்கப்படும் அனைத்து ரெயில்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
==
பிரதமர் மோடி இளைஞர்கள் மீது அக்கறை கொண்டவர்
உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழாரம்
புதுடெல்லி,ஜூன,17-
பிரதமர் மோடி இளைஞர்கள் மீது அக்கறை கொண்டவர் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழாரம் சூட்டியுள்ளார்.
‘அக்னி பாத்’
‘அக்னி பாத்’ என்ற புதிய திட்டத்தில் வேலைக்குச் சேரும் இளைஞர்களின் வயது வரம்பு 21-ல் இருந்து 23 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை பாராட்டியுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:-
கொரோனா பெருந்தொற்று காரணமாக ராணுவத்தில் ஆள்சேர்ப்பு நடைமுறை 2 ஆண்டுகளாக பாதித்தது. அக்னிபாத் திட்டம் பிரதமர் மோடி இளைஞர்கள் மீது கொண்டுள்ள அக்கறையை காட்டுகிறது.
அக்னிவீரர்களுக்கான வயது வரம்பை 23 வயதாக உயர்த்தியது அரசின் அறிவுத்திறனை காட்டுவதாக அமைந்துள்ளது. அக்னிபாத் திட்டத்தின் மூலம் பெருமளவு இளைஞர்கள் பயன் அடைவார்கள். தேசத்திற்கு சேவை அளிப்பது மற்றும் ஒளிமயமான எதிர்காலம் நோக்கி இளைஞர்களால் முன்னேறிச்செல்ல முடியும். இதற்காக பிரதமர் மோடிக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.