June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு

1 min read

Corona exposure continues to increase in Tamil Nadu

19/6/2022
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று கொரோனா பாதிப்பு 596- ஆக இருந்த நிலையில் இன்று பாதிப்பு 692 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

தமிழக்த்தில் நேற்று 692 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்து 243 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 3,522 ஆக உள்ளது.
கொரோனா பாதிப்பால் புதிதாக உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 38,026 ஆக உள்ளது. தலைநகர் சென்னையில் 306 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 122 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.