June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

அதிமுக பொதுக்குழு கூட்டம் சலசலப்புடன் நிறைவு

1 min read

AIADMK general body meeting ends with a bang

23.6.2022
அதிமுக பொதுக்குழு கூட்டம் சலசலப்புடன் முடிந்தது. அடுத்த மாதம் 11ம் தேதி அன்று மீண்டும் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன்அறிவித்தார்.

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம்

இரட்டை தலைமையை ரத்து செய்து, வலுவான ஒற்றை தலைமையை கொண்டுவர உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பரபரப்பான சூழலில் கூடிய அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் நிறைவு பெற்றது.
இதற்கிடையே, பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று வரும் ஜூலை 11ம் தேதி அன்று மீண்டும் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன்அறிவித்தார்.
மேலும், இரட்டை தலைமையை ரத்து செய்து, வலுவான ஒற்றை தலைமையை கொண்டுவர உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், ஒற்றைத் தலைமை விவகாரத்தால் அதிமுக பொதுக்குழு கூட்டம் வானகரம் மண்டபத்தில் சலசலப்புடன் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

ஓ.பன்னீர் செல்வம்

கூட்டத்தில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் ஜூலை 11-ம் தேதி மீண்டும் நடைபெறும் என அறிவித்தார்.
இதையடுத்து, அதிமுக பொதுக்குழு கூட்ட மேடையிலிருந்து ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளியேறினர். எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஓபிஎஸ்க்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அப்போது ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.