அமைப்புசாரா தொழிலாளர்கள் ஓய்வூதியம் பெறும் திட்டத்தில் சேர பொதுசேவை மையங்களில் சந்தா தொகையை செலுத்தலாம்
1 min read
Informal workers can pay their subscriptions at public service centers to join the pension scheme
23.6.2022
அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஓய்வூதியம் பெறும் திட்டத்தில் சேர, பொதுசேவை மையங்களில் சந்தா தொகையை செலுத்தலாம் என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
அமைப்பு சாரா தொழிலாளர்கள்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
ஓய்வூதியம் அமைப்பு சாரா தொழிலாளர்கள் தங்களது 60-வது வயது முதல் மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் பெறும் திட்டத்தை மத்திய அரசுஅமல்படுத்தி உள்ளது. மத்திய தகவல் தொழில் நுட்பதுறையின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள சி.எஸ்.சி இ-கவர்ன்ஸ் சர்வீஸ் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனம் மூலம் இதற்கான பணிகள் நடந்து வருகிறது.
இந்த நிறுவனம் 18 முதல் 40 வயதுக்கு உட்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்களின் பெயர்களை பதிவு செய்யத் தொடங்கி உள்ளது. மாதம் 15 ஆயிரம் ரூபாய் வருமானம் உள்ள 10 கோடி தொழிலாளர்களை ஐந்தாண்டுகளில் சேர்க்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த நிறுவனம் நாடு முழுவதும் 3.13 லட்சம் பொதுசேவைமையங்களைநடத்திவருகிறது.
பதிவு செய்யலாம்
அமைப்பு சாரா தொழிலாளர்கள் தங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள பொதுசேவைமையங்களை அணுகி தங்கள் ஆதார்எண் வங்கி சேமிப்பு கணக்கு எண், ஜன்தன் கணக்கு பாஸ்புக் ஆகியவற்றை காண்பித்து தங்கள் பெயர்களை பதிவு செய்யலாம். சந்தா தொழிலாளர்கள் ஓய்வூதிய திட்டத்துக்கான முதல் மாத சந்தா தொகையை ரொக்கமாக செலுத்தலாம். அதற்கு ரசீது அளிக்கப்படும். 18 வயதில் இந்த திட்டத்தில் சேரும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் சந்தாவாக ரூ.55 செலுத்த வேண்டும். அதற்கு நிகராக தொகையை, அவர்களின் வங்கிகணக்கில் மத்தியஅரசு செலுத்தும். தொழிலாளர்களின் வயது அதிகரிக்கையில் சந்தா தொகையும் உயரும், கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் அனைவரும் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.