குற்றாலம் அருகே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை; பாட்டி-பேத்தி கைது
1 min read
Sale of cannabis to college students near Courtallam; Grandmother-granddaughter arrested
29.6.2022
குற்றாலம் அருகே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பாட்டி-பேத்தி கைது செய்யப்பட்டனர்.
கஞ்சா விற்பனை
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து குற்றாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அலெக்ஸ் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். கஞ்சா விற்பனை செய்பவர்கள் பற்றி விசாரித்து வந்தனர்.
பாட்டி-பேத்தி கைது
இந்தநிலையில் குற்றாலம் அருகே உள்ள ஆயிரப்பேரியைச் சேர்ந்த பார்வதி (வயது 72) மற்றும் அவரது பேத்தியும், அதே பகுதியைச் சேர்ந்த பட்டுராஜ் மனைவியுமான ராமலட்சுமி (20) ஆகிய 2 பேர் கஞ்சா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்ெ்தாடர்ந்து போலீசார் உடனடியாக அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 2 கிலோ 200 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட 2 பேரும் தென்காசி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.