இந்தியாவில் புதிதாக 17,092 பேருக்கு கொரோனா
1 min read
17,092 new cases of corona in India
இந்தியாவில் புதிதாக 17,092 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கடந்த வியாழக்கிழமை தினசரி கொரோனா பாதிப்பு அதிரடியாக 18 ஆயிரத்து 819 ஆக உயர்ந்தது. வெள்ளிக்கிழமை இது சற்றே குறைந்தது. இதன்படி நேற்று 17 ஆயிரத்து 70 பேருக்கு தொற்று ஏற்பட்டது. கடந்த வியாழக்கிழமையுடன் ஒப்பிடுகையில் பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை ஏறத்தாழ 1,750 குறைந்திருந்தது.
இந்நிலையில் இன்று புதிதாக 17,092 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17 ஆயிரத்து 092 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,34,86,326 ஆக அதிகரித்துள்ளது.
29 பேர் சாவு
அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,25,168 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 14,684 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,28,51,590 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 1,09,568 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 1,97,84,80,015 பேருக்கு (இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9,09,776 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மேற்கண்டவாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 4,12,570 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 86,32,90,209 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.