June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

மணிப்பூர் நிலச்சரிவில் 18 ராணுவ வீரர்கள் உள்பட 24 பேர் பலி

1 min read

24 people including 18 army personnel died in Manipur landslide

2.7.2022
மணிப்பூரில் துபுல் என்ற இடத்தில், கடந்த புதன்கிழமை இரவு ராணுவ முகாமில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 18 ராணுவ வீரர்கள் உள்பட 24 பேர் பலியானார்கள். 38 பேர் மாயனார்கள்.

நிலச்சரிவு

மணிப்பூரில் நோனி மாவட்டத்தில் துப்புல் யார்டு ரெயில்வே கட்டுமானப் பகுதிக்கு அருகில் உள்ள ராணுவ முகாமில் புதன்கிழமை இரவு நிலச்சரிவு ஏற்பட்டது.இதில் பலர் சிக்கிக் கொண்டனர். இதுவரை 13 ராணுவ வீரர்கள் மற்றும் 5 பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 18 ராணுவ வீரர்களின் சடலங்கள், 6 பொதுமக்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் போன 12 ராணுவ வீரர்கள் மற்றும் 26 பொதுமக்களை தேடும் பணி இன்னும் தொடர்கிறது.
மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 15 பேர் ராணுவ வீரர்கள். 44 பேரின் நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
விபத்து பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்புப் பணிகளில் மந்தநிலை நிலவுகிறது. மண்ணில் புதையுண்ட வீரர்களைத் தேட ‘வால்-ரேடார்’ கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது. தேடுதல் பணியை துரித்தப்படுத்த புதிய வீரர்கள் அடங்கிய மீட்புக்குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்திய ராணுவம், அசாம் ரைபிள்ஸ், டெரிடோரியல் ஆர்மி, மாநில மற்றும் தேசிய பேரிடர் நிவாரண படை உள்ளிட்ட வீரர்கள் மூலம் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்கின்றன.
இதற்கிடையே அதன் அருகே இன்னொரு இடத்டதிலும் நிலச்சரிவு ஏற்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.